வெற்றிக்கு வழிகள் - பகுதி-3 - வேண்டாமே தாழ்வு மனப்பான்மை
உங்களால் ஒரு செயலைச் செய்ய முடியாவிட்டால் “ஐயோ! இந்தச் செயலை நம்மால் செய்து முடிக்க இயலவில்லையே!” என்ற ஏக்கமும் கவலையும் வந்து விடுகிறது. இதனால் உங்கள் மனம் பேதலித்துப் பலவகை உணர்ச்சி களினால் தத்தளித்துத் தடுமாறுகிறது. நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போன்று எத்தனையோ பேர் உள்ளக் கிளர்ச்சிகளினாலும், மன எழுச்சி களினாலும், தடுமாறித் தவித்துக் கொண்டிருக் கிறார்கள். காரணம், அவர்கள் உள்ளத்தைச் செம்மைப்படுத்தாததுதான்! ஒருவருக்கு இருக்கும் ஆற்றல் மற்றவருக்கு இருக்கும் என்று கூறமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஒருவர் ஒல்லியான தேகத்தைப் பெற்ற வராக இருப்பார். இன்னொருவர் குள்ளமான தேகத்தைப் பெற்றவராக இருப்பார். மற்றொருவர் அடர்த்தியான கறுப்பு நிறத்தைக் கொண்டவராக இருப்பார். கொடிய பிணி யினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார். மூளை வளர்ச்சி குன்றியவராக இருப்பார். திக்குவாயை உடையவராகவும், கீச்சுக்குரலை உடையவ ராகவும், இருப்பார். அனைவராலும் வெறுக்கத் தக்க தடித்த, அகலமான மூக்கைக் கொண்ட வராக இருப்பார்.
பெண்களில் ஓரிருவர் ஆண்களின் குரல் பேசுபவர்களாக இருப்பார்கள். ஓரிருவர் முகத்தில் மீசை முளைப்பதும் உண்டு. மனிதர் களுக்குள் இப்படி எத்தனையோ குறை பாடுகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டு, தங்கள் செயல் பாடுகளை முடமாக்கி விட்டால், அவர்களால் முன்னேற்றப்பாதைக்குச் செல்ல முடியுமா?
படத்தில் இருப்பது: உங்களை யாரும் தாழ்வாக எண்ண முடியாது, உங்களுடைய அனுமதி இல்லாமல் - எலியனெர் ரூஸ்வெல்ட்.

