15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
ராஜகிரி :15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
நாட்டின் 15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி பிப். 9-ல் தொடங்கி 28 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இப்பணியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
கணக்கெடுப்பின்போது தங்கள் குடும்ப விவரங்களைப் பொறுமையாக அளிக்கவும், இக் கணக்கெடுப்பு நாட்டுக்கும், தனி நபர்களுக்கும் தேவையான நலன்கள் குறித்து திட்டமிடுவதற்கு அவசியமாகும்.
இக்கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் நபர்களின் தகவல்களை மட்டும் அளிக்க வேண்டும். கணக்கெடுப்பாளர் கேட்கும் கேள்விகளான குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிறந்த தேதி மற்றும் வயது, திருமண நிலை மற்றும் அப்போதைய வயது, மதம், தாழ்த்தப்பட்டவரா, பழங்குடியினரா அல்லது மற்றவர்களா, மாற்றுத்திறன் (ஊனம்) பற்றிய விவரம், எழுத்தறிவு மற்றும் கல்வி நிலை, பொருளாதார நிலை, இடம் பெயர்ந்த விவரங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பாளரின் கேள்விகளுக்கு தரும் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
சேகரிக்கும் விவரங்கள்... :